அப்பல்லோவில் ஐஸ்கிரீம் சாப்பிட ஜெயலலிதா..!
அப்பல்லோவில் ஐஸ்கிரீம் சாப்பிட ஜெயலலிதா..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததை அடுத்து அவருடைய இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால் நீதி விசாரணைக்காக நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.அதில் தினமும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இரண்டாவது முறையாக இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் அனுமதிக்கபட்டர்,அதன் பின் அவருக்கு மறுநாள் 23 ம் தேதி நினைவந்தது,அப்போது அவர் தான் எங்கு இருக்கிறேன் கேட்டதாக கிருஷ்ணபிரியா வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிநாட்டிற்கு மருத்துவம் பார்க்க சசிகலா விரும்பியபோது, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போது யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை,சசிகலா மட்டுமே அழைக்கும் போது சென்று பார்த்துவிட்டு வருவார்.
மேலும் மருத்தவ மனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என கூறியநிலையில் இன்று கிருஷ்ணபிரியா தனது வாக்குமூலத்தில் இட்லியை அம்மா சாப்பிட்டதாகவும் அதுமட்டுமல்ல உடல் தேறி வரும்போது இட்லி, பொங்கல், தக்காளி சாதம் போன்றவற்றை சிறிய அளவு சாப்பிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் ஐஸ்கிரீம் கூட சாப்பிட்டதாகவும் கூறிஉள்ளார் , ஜெயலலிதாவுக்கு பழங்கள் மிகவும் பிக்கும் என்பதால் ஒரு முறை திரையிசை கூட சாப்பிட்டார்,அவரு சாப்பிடும்போது இருமல் வந்தது என கிருஷ்ணப்ரியா ஜெயலலிதா சாப்பிட லிஸ்ட் அனைத்தையும் வாக்கு மூலத்தில் கூறிஉள்ளார்.
English Summary
not only jayalitha eat idly but also eat ...