புயல் பாதித்த மக்களுக்கு உதவும் புதிய இணையதளம்! 24 மணி நேர அவசர உதவி எண்! உடனே பகிருங்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக  நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்த புயலால் பாதித்த மக்கள் அனைவரும் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருவதால் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும், சினிமா பிரபலங்களும், தன்னார்வலர்களும் முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், புயல் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் உதவி எண்(844-8444-151) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் செயல்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த எண்ணை புதுச்சேரியைச் சேர்ந்த ஜிப்மெர் மையம் உருவாக்கியுள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா வெள்ள பாதிப்பின்போது, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு அல்லாத குரூப்களைச் சேர்ந்தவர்களுடன் உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் இந்த எண்ணை உருவாக்குவதற்கு முன், www.gaja2018.home.blog என்ற இணையதளம் ஒன்றை மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கியுள்ளனர். புயலால் பாதித்த மக்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றை தெரிவிக்க TN Gaja Relief Work என்ற வாட்சப் குழுவிற்கு தெரியப்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New website to help storm people! 24-hour emergency helper number! Share now!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->