தொடரும் பருவ மழை! தமிழகத்துக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தொடரும் பருவ மழை! தமிழகத்துக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை (01.11.2018) தொடங்கியது. இதே போல், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், பல இடங்களில் மழை பெய்து வந்தது.
இதையடுத்து வடகிழக்கு பருவ மழை நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று வரை சில மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை நிலவி வருவதால், தமிழக கடலோர பகுதியில் மேலும் பருவ மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த நிலை தமிழக கடலோர பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் குமரி வழியாக அரபிக்கடலுக்கு செல்கிறது. இதனால் இன்னும் 4 நாட்கள் தென் தமிழக கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Monsoon rains Weather Center warns Tamil Nadu