"சீண்டினால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்.! எதிர்க்கூட்டணியிடம் என்ன உள்ளது?!" மோடி அதிரடி!!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களை நினைவு கூர்கிறேன். 

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயாலிதாவின் எண்ணங்கள் நம்மை வழி நடத்தும் என நினைக்கிறேன்.பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழர் பண்பாடு உலகளவில் பிரசித்தி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி நிலையான ஆட்சி அமைய வேண்டும் என  விரும்புகிறது.

Image result for modi meeting tamil nadu seithipunal

இது இந்தியா 21ஆம் நூற்றாண்டில், எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக நாங்கள் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்த திட்டமும் இல்லை. 

நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி அளிக்கப்படும். நான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா" என அவர் பேசியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech in covai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->