திமுக கூட்டணி ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்ட முதியவர்!! கண்டுகொள்ளாத திமுக ஆதரவு ஊடகங்கள்!!  - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண் விமானத்தில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்பாக "பாசிச பாஜக ஒழிக.!" என கோஷம் போட்டார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக காவலர்கள் அந்த பெண்ணை கைது செய்ததற்கு பெரும் பிரச்சினையாக ஊடகங்கள் பாவித்தன.

ஊடகங்கள் இதனை மிகப்பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கி பாஜக கருத்து சுதந்திரத்தில் தலையிடுகிறது என மக்களை நம்ப வைத்தனர். ஆனால், நேற்று ஒரு வயதானவர் மோடியை ஆதரித்து தனி ஒருவராக பிரச்சாரம் செய்த ஒரு காரணத்திற்காகவே, திமுக-காங்கிரஸ் ஆதரவாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இது குறித்து எந்த ஊடகமும் விவாதம் செய்யவில்லை. காரணம், இவை அனைத்தும் திமுக சார்பு ஊடகங்கள். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள ஒரு வயதான தாத்தா அரசியல் பேசியதற்காக நடு ரோட்டில் வைத்துக் கொலை செய்யப்படுவார் எனில் சுற்றி இருக்கும் திமுக காங்கிரஸ் ஆதரவாளர்கள் எந்த அளவிற்கு மோசமான வன்முறையான மனநிலையை கொண்டிருப்பார்கள் என்பதை உணருங்கள்.

பாஜக ஆதரவாளர்கள் இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்படுவதை, ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக ஆதரவு கூட்டங்கள் இங்கே இருக்கின்றனர். இது அவர்களுக்கு மிகவும் ஆனந்தமான செய்தி. இவ்வாறு மக்களிடையே வெறுப்பை உமிழும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மனிதத்திற்கு எதிராக செயல்படுகிறது. உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பல ஊடகங்கள் திமுக ஆதரவாளராக மறைமுகமாக களமிறங்கியுள்ளது சமூகத்தின் பெரும் அவலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

media did not raise voice for old men death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->