திருப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.!! பாஜக பெண் நிர்வாகியை தாக்கியதால் பரபரப்பு.!! வீடியோ.!!
mdmk perplexity in trippur
கன்னியாகுமரிக்கும், திருப்பூருக்கும் வருகைதரும் பிரதமர் மோடியை தனது தலைமையில், கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.
அதன்படி பிப்ரவரி 10 இன்று, திருப்பூர், பெருமாநல்லூர் பாஜக சார்பில் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அண்ணாசிலை அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த பரபரப்பினால், அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போலீசாரை எதிர்க்கும் வகையில் மதிமுக தொண்டர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி போலீசாருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு இடையூரு ஏற்படுத்தும் வகையில் மதிமுகவினர் செயல்பட்டு வருவதாகவும், பெண் போலீஸ் ஒருவரை தாக்கியுள்ளதாக்கவும் தகவல்கள் வெளியாகின்றன. அங்கு கலவரம் ஏற்படும் சூழல் காரணமாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
English Summary
mdmk perplexity in trippur