கன்னியாகுமரியில் பரபரப்பு || காதலி வீட்டின் முன்பு தீக்குளித்த வாலிபர்.!
man sucide attempt front of girl friend house in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் நித்திரவிளை அருகே ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வாலிபர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் புதுக்கடை பகுதியை சேர்ந்த முகேஷ் என்பதும், இவர் ஆற்றுப்புறம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததும், இந்த காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man sucide attempt front of girl friend house in kanniyakumari