பொதுஇடத்தில் மர்மநபர்கள் செய்த அட்டூழியம்! தட்டி கேட்டவரை இரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித் தெருவில் வசித்து வந்தவர் முருகேசன்.இவர் கருவூல ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகேசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் உள்ள குளகரையில் முருகேசன் குடல் சரிந்து பிணமாக கிடந்துள்ளார்.மேலும் அவருக்கு அருகே ரத்த கரையுடன் உடைந்த மதுபாட்டில்கள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்  இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், முருகேசன் பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள சிசிடிவி கேமிரா கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man killed for talk against drink in puplic places


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->