கடலூரில் சோகம் - மின்னல் தாக்கி ஒருவர் பலி.! பெண் உள்பட ஐந்து பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் சோகம் - மின்னல் தாக்கி ஒருவர் பலி.! பெண் உள்பட ஐந்து பேர் படுகாயம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள, சின்னகாரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவர் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த தனது மாட்டை பிடிக்க சென்றப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல், கடலூர் மாவட்டம், ராமநாதன்குப்பம் பெருமாள் ஏரிக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழே மழைக்காக 5 பேர் ஒதுங்கி நின்றபோது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி ஒருவரும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died and five peoples injured for lightening attack in cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->