நாகையில் இன்ஸ்பெக்டர்க்கு வந்த நோட்டு! ஏட்டு வைத்த வேட்டு!
நாகையில் இன்ஸ்பெக்டர்க்கு வந்த நோட்டு! ஏட்டு வைத்த வேட்டு!
தமிழ்நாட்டில் அடிக்கடி புயல் வீச்சுக்குப் பெயர் போனது, நாகபட்டினம் மாவட்டம். இங்குள்ள சீர்காழி திருவெண்காடு காவல் நிலையத்தில் உள்ள பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சரியான வசூல் ராணி என பெயர் பெற்றுள்ளார்.
இவருக்கு வாய்த்த டிரைவர், இன்ஸ்பெக்டருக்கு ஒரு படி மேலே இருக்கிறரார். மணல் கடத்தும் கும்பலிடமிருந்து வர வேண்டிய வசூல் தொகையை, நாணயமாக ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலித்து, இன்ஸ்பெக்டரிடம் பவ்யமாக கொடுத்து, கை கட்டி நிற்பார். அந்த விசுவாசம், அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனவே, இன்ஸ்பெக்டரின் மாமூல் வசூல் வேலைகளை எல்லாம், அந்த டிரைவரிடமமே ஒப்படைத்து, காரியத்தை கச்சிதமாக முடித்து விடுகிறார்.
அதனால், அந்த பெண் இன்ஸ்பெக்டர், டிரைவருக்கு தர வேண்டியதில் ஏதும் குறை வைக்காமல், பார்த்துக் கொண்டார். இதனால், வயிற்றெரிச்சலில் இருந்த மற்ற போலீசார் சிலர், அந்த பெண் இன்ஸ்பெக்டரையும், டிரைவரையும் சம்பந்தப் படுத்தி, துண்டு பிரசாரங்களை எல்லாம் விநியோகித்து உள்ளனர்.
இதைக் கண்டு, வெகுண்டெழுந்த இன்ஸ்பெக்டர், யார் இந்த வேலையைச் செய்தது? என்று ரகசியமாக ஆய்வு செய்தார். ஆனால், அவ்வளவு சீக்கிரம் அதை அவரால் கண்டு பிடிக்க இயலவில்லை. இறுதியில், அந்த வேலையைச் செய்தது, பக்கத்து ஊரில் பணி புரிந்து வரும் ஏட்டு என்பதை கண்டு பிடித்தார். பின், அந்த ஏட்டு, மணல் கடத்தும் கும்பலுடன் தொடர்பு கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
English Summary
lady police inspector involve in sand quarry corruption