பணி மாற்றம்..! மனமுடைந்த பெண் காவல் ஆய்வாளர்..! எஸ்பி அலுவலகத்தை அதிரவைத்த சம்பவம்..!! கண்டுகொள்ளாத தமிழக அரசு..!!! - Seithipunal
Seithipunal


போலீஸ் துறையில் சமீப காலமாக தொடர்ந்து வரும் தற்கொலைகள், சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. பணிச்சுமை, உயர் அதிகாரிகளின் கெடுபிடி போன்றவற்றால், இவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்து வருபவர் சுகுணா. இவரை மாவட்ட எஸ்.பி. தேஷ்முக் சேகர், ஆயுதப் படைக்கு மாற்றினார். இந்தப் பணி மாறுதலை இன்ஸ்பெக்டர் சுகுணா விரும்பவில்லை.

இதனால், இவர் யாருடனும் பேசாமல், மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. நேற்று முன் தினம் இரவு, எஸ்.பி. அலுவலக போர்டிகோவில் நின்றபடி, அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

இதனை அறிந்த நுண்ணறிவு பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் சுகுணாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.பி. அலுவலகத்திலேயே துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LADY POLICE INSPECTOR COMMITTED SUICIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->