பாலியல் புகார் - கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கைது.!
Kalashetra college ex professer arrest for harassment
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பேராசிரியர் ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்திருந்தார்.
தற்போது வெளிநாட்டில் உள்ள அந்தப் பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், பேராசிரியர் ஸ்ரீஜித்தை கைது செய்துள்ளனர்.
தற்போது ஸ்ரீஜித் தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார். இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kalashetra college ex professer arrest for harassment