தவறாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்...பதிலளித்த ஐஸ்வர்யா ராய்..! - Seithipunal
Seithipunal


நடிகை ஐஸ்வர்யா ராயிடம், இது மணிரத்னத்துடன் உங்கள் இரண்டாவது படம் என பேசிய செய்தியாளருக்கு, பதில் அளித்த நடிகை ஐஸ்வர்யா ராய்,  நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார்.  இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய முன்னணி நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

இதில், குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இவ்விழாவில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே விழாவில் கலந்துக் கொள்ள வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, இந்தப் படத்தில் நடித்தது பெருமையாகவும், மணி சாருடன் மீண்டும் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

PROMOTED CONTENT
Public Speaking Classes for kids (4 to 14 years)
Public Speaking Classes for kids (4 to 14 years)
PlanetSpark
4 BHK Villas, 15 Mins From Manyata Tech Park
4 BHK Villas, 15 Mins From Manyata Tech Park
MIMS Northdale | Luxury Villas

அப்போது செய்தியாளர்களிடமிருந்து, மணிரத்னத்துடன் இது உங்களுடைய இரண்டாவது படம், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற குரல் எழும்பியது. அதற்கு ஐஸ்வர்யா ராய் தெரிவித்ததாவது, “இரண்டாவது படமா? நான் அவருடன் நிறைய படங்களில் பணிபுரிந்து விட்டேன். நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன், போய் செக் செய்து பாருங்கள். மணி சாரின் இருவர் படத்தின் மூலம் தான் எனது கரியர் ஆரம்பமானது. பின்னர் குரு, அதற்கடுத்து ராவணன், இப்போது பொன்னியின் செல்வன்” என இயக்குநர் மணிரத்னத்துடன் தான் இணைந்து பணிபுரிந்த படங்களை பட்டியலிட்டார் ஐஸ்வர்யா ராய்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

journalist wrong question aishwarya rai answer


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->