அறையெங்கும் பெட்ரோல் வாசம்.. மனைவியுடன் சேர கணவன் எடுத்த விபரீத முடிவு..? - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் முருகன்(வயது36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரோசனப்பட்டியை சேர்ந்த ஆண்டவர் என்பவரின் மகள் வேல்மணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடிதகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன் -மனைவிஇருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வேல்மணி தேனியில் உள்ள அவருடைய தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்தார். மனைவியுடன் சேர்ந்து வாழ அவர் எடுத்த பலமுயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்தார்.

முருகன் கையில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டே காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றினர்.

மேலும்அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மனைவியுடன் சேர்த்துவைக்கும்படி புகார் கொடுக்க வந்ததாக கூறினார்.

உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டே போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband wife fight ends with suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->