மனைவியின் தலையில் அம்மிக்கல்.! கணவனின் தலையில் விழுந்த பேரிடி.!! நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


 

சென்னை கிண்டிக்கு அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் முத்துராமலிங்க தெருவை சார்ந்தவர் மோகன் (48)., இவரது மனைவியின் பெயர் பரமேஸ்வரி (வயது 40). இவர்கள் இருவருக்கும் தினேஷ் மற்றும் சம்பத் என்ற மகன்கள் உள்ளனர். 

மோகன் மற்றும் பரமேஸ்வரிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது., இந்நிலையில்., கடந்த 7 ம் தேதியன்று வழக்கம் போல இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்., உறங்கிக்கொண்டிருந்த பரமேஸ்வரியின் தலையில் அம்மிக்கல்லை போட்டார். 

இதனால் படுகாயமடைந்த பரமேஸ்வரி அலறவே., தாயின் அலறலை கேட்ட மகன்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்றனர். இதனை கவனித்த மோகன் அங்கிருந்த தப்பியோடினர். 

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாயை கண்ட மகன்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோகனை தீவிரமாக தேடி வந்தனர். அந்த சமயத்தில் மனைவி மீது கல்லை போட்டு கொலை செய்த பின்னர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் தேடினர். 

இந்நிலையில்., காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூரில் உள்ள உறவினரின் இல்லத்தில் மோகன் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து., அங்கு விரைந்த காவல் துறையருக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த தகவல் கிடைத்தது. மோகனின் பிரேதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து அவரது உறவினரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது., மனைவியின் மீது அம்மியை போட்டு விட்டு தற்போது இங்கு வந்துள்ளேன்., மேலும் தவறு செய்துவிட்டேன் என்று மோகன் கூறியுள்ளார்., மேலும் மோகனின் மனைவி இறந்துவிட்டது தூக்கிட்டு அவருக்கும்., எங்களுக்கும் தெரியாது என்று தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HUSBAND KILLED WIFE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->