திருச்சியில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..! தானும் சுற்றுக்கொன்று தற்கொலை..!!
திருச்சியில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..! தானும் சுற்றுக்கொன்று தற்கொலை..!!
மனைவியைக் கொன்று விட்டு, கணவனும் தற்கொலை
ஒருவரை ஒருவா் புரிந்து கொள்ளாமல், தம்பதியர் வெறும் வார்த்தைகளால் துவக்கும், யுத்தம் சில சமயங்களில், உயிரையே பறித்து விடுகிறது. அதனால், ஏற்படப் போகும் பின் விளைவுகளை மறந்து விடுவது தான் சோகம்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 30) இவர் பீஹாரில், உள்ள எல்லைப் பாதுகாப்பு படையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். இவரது மனைவியின் பெயர், ரஜினிகுமாரி (வயது 29).
ரஜினிகுமாரி திருச்சி ரெயில்வே ஜங்சனில் பணி புரிந்து கொண்டிருந்தார். இதனால், திருச்சி மாவட்டம் கல்லுக்குழி சுப்பராய தெருவில், ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
அந்தப் பெண் குழந்தை, திருச்சி டிவிஎஸ். டோல்கேட் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தையை, பீஹாரில் உள்ள தன் தாயார் வீட்டில் விட்டு விட்டு, வந்து விட்டார்.
இதற்கிடையே, ரஞ்சித் குமார், லீவு எடுத்துக் கொண்டு, திருச்சியில் உள்ள தன் மனைவியைப் பார்க்க வந்தார். மனைவிக்குச் சொல்லாமலே, திருச்சியில் உள்ள மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரஜினிகுமாரி பணியில் இருந்துள்ளார்.
பணி முடிந்து, வீட்டிற்கு வந்தவர், அங்கிருந்த கணவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது ரஞ்சித்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
இங்கும், இந்த இருவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அது எல்லை மீறியது. உடனே, ரஞ்சித்குமார், தன் கையில் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் மனைவியை சராமரியாகச் சுட்டார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் போலீசுக்கு போன் செய்தனர்.
அவர்கள வந்து பார்த்த போது, ரஞ்சித்குமார், தன் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவி, ரஜினிகுமாரியும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இவர்களின் குழந்தை, இந்த விபரம் ஏதும் தெரியாமல் அனாதையாக நிற்கிறது.
English Summary
HUSBAND KILLED IN GUN GHOOT FIRE AND HE ALSO SUICIDE