நெல்லை: தடைகளை தாண்டி காதல் திருமணம்..! ஒரே மாதத்தில் காதல் மனைவியின் தலையைத் துண்டித்த காதல் கணவன்..!!
காதல் திருமணம் செய்து ஒரு மாதம் கூட ஆகலை..! அதற்குள் மனைவியைக் கொன்று தலையைத் துண்டித்த சிறை வார்டன்..!!
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள தென்கலம்புதுாரைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 27) இவர் 2011-ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில், சிறை வார்டனாகப் பணி புரிந்தார்.
பின் பணி மாற்றலாகி திருநேல்வேலிக்கே வந்து விட்டார். பின் அந்தப் பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் (வயது 21) என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர்.
இந்தக் காதல் விவகாரம் பாலகுருவின் வீட்டினருக்குப் பிடிக்கவில்லை. இதனால், பாலகுருவும், வேலம்மாளிடம் பழகுவதைத் தவிர்த்துள்ளார். ஆனால், வேலம்மாள், பாலகுருவிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால், இரு தலைக் கொள்ளி எறும்பு நிலையில் இருந்த பாலகுரு, சென்ற மே 31-ஆம் தேதி, குறுக்குத் துறை சுப்ரமணியர் கோயிலில் வைத்து, வேலம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தைப் பற்றி, தன் குடும்பத்தில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார் வேலம்மாள். மேலும், திருமணம் ஆனதில் இருந்தே, பாலகுருவிற்கும், வேலம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்தது.
நேற்று முன் தினம் மாலை, வேலம்மாளிடம், திருச்செந்துார் சென்று வரலாம், என்று கூறி மனைவியை பைக்கில் அழைத்துச் சென்றார். தென் கலம்பூரில் இருந்து நான்கு வழிச்சாலையில், பைக்கில் சென்று, பொட்டல் என்ற பகுதி அருகே வந்த போது, இருவருக்கும் மீண்டும் தகராறு வந்துள்ளது.
இதனை அடுத்து, அருகே உள்ள வயல்காட்டு பகுதிக்கு வேலம்மாளை பைக்கில் அழைத்துச் சென்ற பாலகுரு, வண்டியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலம்மாளைக் கொடூரமாக வெட்டி, அவரது தலையை துண்டாக எடுத்தார்.
பின உடலை அங்கேயே போட்டு விட்டு, தலையை நான்கு வழிச்சாலை வடக்கு பகுதியில் வீசி எறிந்து விட்டார். கொலை செய்த அரிவாளை, தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தார்.
பின், அதிகாலையில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
English Summary
HUSBAND KILL WIFE WITH IN ONE MONTH