பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட இருக்கும் தொகுதி?! எச்.ராஜா வெளியிட்ட தகவல்!!  - Seithipunal
Seithipunal


பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடியில் இன்று நடைபெற்றது.

அதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக-பாமக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இது மிகவும் வலிமையான கூட்டணி. மதிமுக கட்சி என்பது ஒரு முழுமையடையாத கட்சி, அது பூஜ்ஜியம். அது எங்களுடன் கூட்டணிக்கு வராதது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட அபிநந்தன் மிகவும் தேச பக்தி உடையவர். பிரதமர் மோடியினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தான் பாகிஸ்தான் கைதியாக சிறை பிடிக்கப்பட்ட அபி நந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகள் அனைத்தும் மோடியின் இந்த முடிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தான் பாகிஸ்தான் அரசு போர் வேண்டாம் என்று சமாதானம் பேச வருகின்றது.

இதற்கு முன்பு மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பாகிஸ்தான் ஏதும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. இந்திய இளைஞர்கள் அனைவரும் வீரர் அபிநந்தன் போன்று தேசப்பற்றையும், மன உறுதியையும் பெற வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் என்னை சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தினால், அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h.Raja says about his nomination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->