மதுவினால் மரணமடைந்த அண்ணன்!. அண்ணன் இறந்த அதிர்ச்சியில் உயிரைவிட்ட தங்கை!.
அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மதுவுக்கு அடிமையானதால் இவர் சரியாக பணிக்கு செல்லாமால் இருந்துள்ளார். இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த திருப்பதி, அளவுக்கதிகமாக மது குடிக்க ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருமணம் செய்துகொள்ளாத இவர் தனது இரண்டு தங்ககைள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரது இறப்பு செய்தி தொலைபேசி வாயிலாக இவரது இரு தங்கைக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருந்தபோது அவரின் இளைய தங்கை அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இருவரது உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நடந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.
English Summary
his sister died in the shock of her brother's death