கருவறைக்குள் புகுந்ததால் ஆத்திரம்.!! கஞ்சா குடிக்கியை பூஜை மணியால் அடித்த குருக்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை குருக்கள் பூஜை மணியால் அடித்த சம்பவத்தால் பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலையில் பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் வந்த மர்ம ஆசாமி ஒருவர் கோவில் கருவறையினுள் சென்று ஒளிந்து கொண்டார். இதைக் கண்ட கோவிலுக்கு வந்த பெண்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு ஒளிந்திருந்த ஆசாமியை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவில் குருக்கள் கஞ்சா குடிக்கி இளைஞனை மடக்கிப்பிடித்த கையில் வைத்திருந்த மணியால் சரமாரியாக அடித்தார். குருக்களின் அடிதாங்க முடியாமல் வலியால் அலறிய இளைஞர் தன்னை ஒருவன் வெட்ட வருவதால் உள்ளே வந்து ஒளிந்து கொண்டதாகவும் கூறிய நிலையிலும் கோபத்தை அடக்காத குருக்கள் அவனை ஏறி மிதித்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.

தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததால் கோவிலுக்குள் ஒளிந்து கொண்டது தெரிய வந்தது.

கஞ்சா குடுக்கி கோகுலிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் ஒளிந்த நபரை குழுக்கள் பூஜை மணியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gurus attacked man who entered temple under ganja influence


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->