கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வெட்டி கொலை செய்த அதிமுக பிரமுகர்!! தனிப்படை போலிஸ் விசாரணை!! - Seithipunal
Seithipunal


கீரனூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(70). தொழில் அதிபர். இவருடைய மகன் முத்து (30). வீராச்சாமிக்கு விராலிமலையில் சொந்தமாக பெட்ரோல் பங்க் உள்ளது.

இந்நிலையில் களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (52), என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீரச்சாமியிடம் ரூ. 1 கோடிக்கும் மேல் கடனாக பணம் வாங்கி உள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். 

இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகியோரை, மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர் வெட்டிக்கொன்றனர்.

இந்த கொலை சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், மூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வினோத், சிக்கல்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவான மூர்த்தி உள்ளிட்ட கும்பலை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and son murdered in keeranur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->