இந்தியா கூட்டணி 'மகத்தான வெற்றி' பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்.!
EVKS Elangovan says India alliance big win
ஈரோடு, கிழக்கு சட்டப்பேரவை தொகுதி கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவரது மனைவி, மகன் ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி மற்றும் தமிழாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக அமையும்.
இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரும். யார் பிரதமராக வருவார்கள் என்பதை ஸ்டாலின், ராகுல் காந்தி முடிவு செய்வார்கள்.
இதில் எந்த ஒரு பிரச்சனையும் வராது. மக்கள் விரும்புகிற ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார். மோடி மீண்டும் வரக்கூடாது என்ற ஆவலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள்.
இந்த தேர்தலில் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவு ஆகும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EVKS Elangovan says India alliance big win