காலி மதுபாட்டிலும் காசுதான்..! இன்றுமுதல் நடைமுறை: குஷியில் மதுபிரியர்கள்!
empty liquor bottle Rs 10
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் இன்று முதல் விற்பனை செய்யப்படும் மது பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஏராளமான அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் பசுமை மாவட்டமாக தேனி மாவட்டம் அறிவிக்கப்பட்டதால் மது பாட்டில்களால் வயல்வெளி, ஆறு, வாய்க்கால் போன்ற பகுதிகளில் மாசு ஏற்படாமல் இருக்க அரசு காலி மது பாட்டிலை கொடுத்தால் ரூ.10 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டம் இன்று முதல் தேனி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது பாட்டில்களை கொடுத்து 10 ரூபாயை வாங்கி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
English Summary
empty liquor bottle Rs 10