ஓசூரில் முகாமிட்ட தோனி! தமிழகத்தை சுற்றி வர காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


தோனி குளோபல் பள்ளியில் 8 ஆடுகளங்களை திறந்து வைத்தார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இது மட்டுமின்றி அவருக்கு மதுபானம், ஆடைகள் தயாரிப்பு, விவசாயம் என பல தொழில்களை செய்து வருகிறார். மேலும் தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்

பெங்களூருவில் உள்ள தோனி குளோபல் ஸ்கூல் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ் தோனி கலந்து கொண்டார். அந்த விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடினார். பெங்களூரு பள்ளி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள தோனி குளோபல் பள்ளிக்கு வருகை புரிந்த எம்.எஸ் தோனி. பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த 8 கிரிக்கெட் ஆடுகாலங்களை திறந்து வைத்தார். இந்த எட்டு ஆடுகளங்களும் எம்எஸ் தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது. எதிர்கால கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஆடுகளங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ் திரைப்படத் துறையிலும் எம்.எஸ்.தோனியின் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இது சம்பந்தமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எம்.எஸ்.தோனி தற்பொழுது தமிழகத்தில் உள்ள சில பிரபலங்களையும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni inaugurates eight pitches at Global School Hosur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->