துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சந்தியாவைப் பற்றித் துப்புக் கொடுத்த அவரது ஆண் நண்பர்…!
clue given by the boy friend of murdered Sandhiya
சமீபத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் அங்கங்கள் சென்னையில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப் பட்டது.
இந்த உடல் பாகத்திற்குச் சொந்தமானவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். வெட்டுண்டு கிடந்த பெண்ணின் கையில், டிராகன் மற்றும், சிவன் பார்வதி படங்கள் பச்சை குத்தப் பட்டிருந்தன.
இந்த அடையாளங்களை வைத்துத் தான், போலீசார், கொலை செய்யப் பட்டது யார்? என்று விசாரிக்கத் துவங்கினர். இது பற்றித் தகவல் தர வேண்டும், என்று செல்போன் எண்களுடன் செய்தி வைரலாகப் பரவியது.
இதைக் கண்ட சந்தியாவின் ஆண் நண்பர் ஒருவர் தான், போலீசுக்கு ஃபோன் செய்து, “என் தோழி சந்தியாவும், கையில் இது போல், கையில் டிராகன் படத்தை பச்சை குத்தியிருப்பார். ஆனால், கடந்த சில நாட்களாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், முடியவில்லை” என்று கூறி உள்ளார்.
பின்னர் தான் போலீசார், அந்த ஆண் நண்பரிடம், சந்தியாவின் மொபைல் நம்பரைக் கேட்டு வாங்கினார்கள். அந்த மொபைல் எண்ணைக் கொண்டு ஆய்வு செய்த போது தான், கொலை செய்யப் பட்டது சந்தியா என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.
சந்தியா துாத்துக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு, பல ஆண்களுடன் நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது. அவர்களில் ஒரு ஆண் நண்பர் தான், சந்தியாவின் டிராகன் மச்ச அடையாளத்தைக் குறிபபிட்டுக் கூறி உள்ளார்.
சந்தியாவைக் கொலை செய்த அவரது கணவர் டைரக்டர் பாலகிருஷ்ணன், சந்தியாவைக் கொன்ற பிறகு, சந்தியாவின் செல்போனை சுக்கு நுாறாக உடைத்து விட்டார்.
ஆனாலும், அந்த மொபைல் போன் சிக்னலை வைத்துத் தான், போலீசார் அவரது கணவர் பாலகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
English Summary
clue given by the boy friend of murdered Sandhiya