சென்னை | பிறந்த நாளே இறந்த நாளான சோகம்! ரேபிடோ வாகன விபத்தில் இளம் பெண் பலி!
Chennai Rapido Bike Accident young lady death
சென்னையில் ரேபிடோ வாடகை வாகனத்தில் சென்ற இளம் பெண் பலியாக சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில், தேவிகா என்ற பெண் தனது பிறந்தநாளில் ஆசிர்வாதம் வாங்குவதற்காக தாய் வீட்டுக்கு சென்றபோது, லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாக சம்பவம் அரங்கேறியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் தேவிகா என்ற 39 வயது பெண், சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார்.
இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது தாயார் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெறுவதற்காக பைக் டேக்ஸி என்று சொல்லப்படும் ரேபிடோ வாகனத்தில் சென்றுள்ளார்.
தேனாம்பேட்டை மூப்பனார் பாலம் அருகே தேவிகா சென்ற ரேபிடோ இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தேவிகா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட தகவலின் படி இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர்தப்பி தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
English Summary
Chennai Rapido Bike Accident young lady death