தர்மபுரி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - சௌமியா அன்புமணி நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அவருக்கு பெண்கள் ஒன்று திரண்டு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த 
வாக்கு சேகரிப்பின் போது பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி பேசுகையில், "தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் அளிக்கும் ஆதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மக்களின் ஆரவாரமும், அவர்களின் வரவேற்பும் தர்மபுரி தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று காட்டுகிறது. 

இந்த மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைவுப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

candidate sowmiya anbumani election campaighn in dharmapuri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->