தி. மலை || ஆசையாய் டிராக்டரில் அமர்ந்த ஆறு வயது சிறுவன் - நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பண்டாரதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. விவசாயியான இவர் தனது நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார். 

இந்த நிலையில், தண்டபாணி நேற்று டிராக்டரில் தனது மகன் தஷ்வந்தை அருகில் உட்கார வைத்துக் கொண்டு உழவுப் பணி செய்தபோது சிறுவன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தண்டபாணி, தனது மகனை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த தஷ்வந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். 

இதையடுத்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for fell down in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->