பேஸ்புக் காதலியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்.! ஒன்றாக சேர்ந்து எடுத்த அந்தரங்க போட்டோக்களை காட்டி பணம் பறிக்க முயற்சி.!!
பேஸ்புக் காதலியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்.! ஒன்றாக சேர்ந்து எடுத்த அந்தரங்க போட்டோக்களை காட்டி பணம் பறிக்க முயற்சி.!!
சமூக வலைதளங்களில் முதன்மையானது பேஸ்புக் இதனை பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் பெறப்படுகின்றன, அதே போல சில தீமைகளும் உண்டாகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் ஒரு பட்டதாரி பெண் தனது பேஸ்புக் நண்பர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம், குமரி மாவட்டத்தில், ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த, நம்பி என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு உண்டானது, இதன்மூலம் இருவரும் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு பேஸ்புக் மூலம் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிய சுரேஷ், அந்தப் பெண்ணை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறினான். காதலன் அழைத்ததால் மறுக்காமல் நேரில் சந்தித்த அந்த பெண், பிறகு அவனுடன் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில் சுரேஷ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுரேஷ் அப்பெண்ணை பல கோணங்களில் படம் எடுத்தார். இருவரும் சேர்ந்து பல செல்பியும் எடுத்துக் கொண்டார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், சுரேஷ் எப்படியும் நம்மை திருமணம் செய்வான் என எண்ணி அந்த பெண் முழுமையாக நம்பி போட்டோக்கள் எடுத்துக்கொண்டாள். ஆனால் சுரேசுக்கு விபரீத எண்ணத்தில், ஊருக்கு சென்று நடந்த விவரத்தை தனது நண்பன் அரிகரசுதனிடம் கூறினான். மேலும் காதலியோடு எடுத்த போட்டோக்களையும் காண்பித்தான். அவன் சுரேசின் காதலியை சந்திக்க விரும்பினான். காதலனின் நண்பன் தானே என்று அந்த பெண், அரிகரசுதனிடமும் அன்பாக பழகினாள். சிறிது நாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
மேலும், இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். தொந்தரவு தாங்காமல் அந்த பட்டதாரி பெண் பணகுடி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீசார் அவர்கள் இருவரையும் அந்தப் பெண்ணின் மூலமாக பணம் தருவதாக காவல்கிணறு சந்திப்புக்கு வர வைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை அவர்கள் இருவரும் வேறு நண்பர்களுக்கும் கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணுக்கு போனில் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
boy cheating for his facebook girlfriend