BREAKING NEWS : லஞ்சப் புகாரில், கைது செய்யப்பட்டார் துணை போலீஸ் கமிசனர்….! - Seithipunal
Seithipunal


 

திருச்சியில் துணை போலீஸ் கமிசனராகப் பணியாற்றி வருகிறார் அருள் அமரன்.

இவர் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லாத் துறைகளிலும், லஞ்சம் வாங்கிக் கொண்டு காரியத்தை முடிக்கிறார், என்ற குற்றச்சாட்டு பரவலாக ஏற்கனவே பல முறை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அதிகம் லஞ்சம் வாங்குவதாகவும், துணை கமிசனர் அருள் அமரன் மீது, குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அருள் அமரன் மீது, வந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக, துணை கமிசனர் அருள் அமரனைக் கைது செய்துள்ளனர்.

அவரைக் கைது செய்து, தனியாக ஒரு இடத்தில் வைத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், அருள் அமரன் மீது, யார் லஞ்சப் புகார் கொடுத்தது? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asst. Police commissioner has been arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->