தலைக்கேறிய போதை... தண்டவாளத்தில் கட்டிப்பிடித்து புரண்ட மாணவர்கள்!
Arakkonam railway tracks students fell down
ராணிப்பேட்டை, அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்ஃபாரத்தில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அதுபோல் நேற்று 5வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐடிஐ சீருடை அணிந்த 2 மாணவர்கள் வந்து திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டிப்பிடித்து புரண்டனர்.
ஒரு மாணவர் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் கீழே விழ இன்னொரு மாணவர் அவரை தாங்கி பிடித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ஒரு ரயில்களும் வரவில்லை.
இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த 2 மாணவர்களையும் உடனடியாக விரட்டியடித்தனர்.
இந்த காட்சி தற்போது மக்களிடையே வீடியோவாக பரவி வருகிறது. மாணவர்கள் கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவிற்கும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Arakkonam railway tracks students fell down