#சென்னை : மாநிலம் கடந்த காதல், எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


சென்னை அம்பத்தூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பதினொரு மணி அளவில், இளம்பெண் ஒருவரும் வாலிபரும் அம்பத்தூர் ரயில் நிலையத்தின் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்து உள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அருகில் கடந்த அவர்களின் பைகளில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து, இறந்து போனது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் வயது 22 என்பதும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யா வயது இருபத்தி ஒன்று என்பதும் தெரியவந்தது.

இவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்று போலீசார் முதல்கட்டமாக சந்தேகம் கொண்டுள்ளனர். மேலும், அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்த பிறகு தான் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMBATHUR RAIWAY DEAD LOVERS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->