வேலூர் கோட்டைக்கு வந்துள்ள ''முதல் பிரதமர்''... - ஏ.சி.சண்முகம் பெருமிதம்.!
AC Shanmugam says first PM visit Vellore
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்து பிரசார கூட்டத்தில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் மேடைக்கு பிரதமர் வந்தவுடன் பா.ஜ.கவினர் கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பேசிய போது,
வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி தான். உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் உதவுகிறார்.
இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்.
இதனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
AC Shanmugam says first PM visit Vellore