கணவருடன் சேர்ந்து வாழ கூறிய உறவினர்கள்.! மகராசி செய்த காரியத்தால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!!
கணவருடன் சேர்ந்து வாழ கூறிய உறவினர்கள்.! மகராசி செய்த காரியத்தால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தை சார்ந்தவர் காசி., இவர் விவசாயியாக பணிசெய்து வருகிறார். இவரது மகளின் பெயர் மகராசி (27). இவருக்கும் சென்னையை சார்ந்த நாராயணன் என்பவருக்கும் சென்ற 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது.
இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதுடைய சிவமகேஸ்வரி எனும் பெண் குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில்., இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில்., இந்த தகராறு வழக்கம் போல ஏற்பட்டு அதிகரிக்கவே., கோபமடைந்த மகராசி குழந்தையுடன் நெல்லையில் உள்ள தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இவரை மீண்டும் சாந்தப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வீட்டார்கள் அனைவரும் சேர்ந்து அவரை தொடர்ந்து சமாதானம் செய்துகொண்டு இருந்துள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலில் மகராசி இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில்., மகராசியின் குழந்தை காலையில் வீட்டின் அருகே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய காவல் துறையினர்., குழந்தையின் தாயான மகாராசியை விசாரித்த போது அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் மகாராசியை காவல் துறையினர் தேடிய போது அவர் அங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. இவரின் இருப்பிடம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., கணவரை பிரிந்து தாயாரின் வீட்டிற்கு வந்த போது., அனைவரும் தொடர்ந்து கணவருடன் சேர்ந்து வாழக்கூறி வற்புறுத்தி வந்ததன் காரணமாக.. கடும் மனவிரக்தியில் குழந்தைக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து கொலை செய்தேன். மேலும் நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காட்டுப்பகுதியில் சென்று பதுங்கிய போது காவல் துறையினர் என்னை கண்டறிந்தனர் என்று கூறியுள்ளார்.
கணவருடன் சேர்ந்து வாழக்கூறி உறவினர்கள் நல்ல வழிகாட்டியதற்கு தற்கொலை முடிவு எடுத்து அதில் பெற்ற பிள்ளையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A MOTHER KILLED HER DAUGHTER