மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்... வாயை பொத்தி இழுத்துச்சென்று... 2 ரவுடிகள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பின் ஒருவர் சுற்றித் திரிவார். இன்று அதிகாலை அந்தப் பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண்ணை வாயை பொத்தி தூக்கி கொண்டு சென்று  இருட்டான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீரமணி மற்றும் மணிகண்டன் என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் பட்டாக்கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது மேலும் இருவரின்  மீதும்  செயின் பறிப்பு மற்றும் திருட்டு போன்ற 18க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A mentally challenged young woman was sexually assaulted inTambaram Two rowdies arrested.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->