சசிகலா போஸ்டர் கிழித்த விவகாரம்.! தேவர் அமைப்பைச் சேர்ந்தவர் படுகொலை.!! - Seithipunal
Seithipunal


சசிகலா போஸ்டரை கிழித்த விவகாரத்தில் தேவர் அமைப்பைச் சேர்ந்தவரை இந்து முன்னணி அமைப்பினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் தேவர் அமைப்பைச் சேர்ந்த தங்கபாலு. சசிகலா பிறந்த நாளை ஒட்டி இவரது கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் கிழிப்பதைக் கண்ட தங்கபாலு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போஸ்டரை கிழித்த நபர்களை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேர் தங்கபாலுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை சரமாரியாக அறிவாளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தங்கபாலு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தங்கபாலு மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேவர் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man hacked to death in Tirupur who tore down Sasikala poster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->