ஈரோட்டில் வானில் இருந்து விழும் விசித்திரம்.! பீதியில் திகைக்கும் மக்கள்.!!
ஈரோட்டில் வானில் இருந்து விழும் விசித்திரம்.! பீதியில் திகைக்கும் மக்கள்.!!
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதலாகவே நல்ல மலையானது பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதலாகவே நல்ல மழை பெய்தது., தற்போது வரை மழை பெய்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்., சத்தியமங்கலத்தில் உள்ள ஐயப்பன் நகரை சார்ந்தவர் சிவக்குமார். இவர் நேற்று இரவில்., இவரது இல்லத்தின் மேல்தளத்தில் நின்றுகொண்டு மழை பெய்வதை கண்டு இரசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வானை பார்க்கும்போது., மழை பெய்யும் நேரத்தில் வானில் சிறியளவிலான நெருப்பு பந்தொன்று வந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை கண்ட அவர் உடனடியாக அவரின் அலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த நெருப்பு பந்தை கண்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் அவர்களின் அலைபேசியில் அதனை பதிவு செய்துகொண்டனர். அலைபேசியில் புகைப்படம் எடுத்தாலும் அந்த நெருப்பு பந்தானது, எந்த பகுதியில் சென்று விழப்போகிறதோ என்ற அச்சத்திலும் இருந்தனர்.
ஆனால் அந்த நெருப்பு பந்தானது., நல்ல வேலையாக திம்பம் மலையில் உள்ள காட்டுப்பகுதியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்ட போது., நெருப்பு பந்தானது வனப்பகுதியில் விழுந்ததை பலர் பார்த்துள்ளனர்.
அந்த வகையில் நெருப்பு பந்தானது., வனப்பகுதியில் விழுந்திருந்தால் காட்டுத்தீ பற்றியிருக்கும்., மழை பெய்வதன் காரணமாக தற்போது அந்த நெருப்பு பந்தானது அணைந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
English Summary
A FIREBALL COMING FROM SPACE AT ERODE