சென்னை: 2 மகள்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்த தந்தையும் தற்கொலை முயற்சி.!
A father who gave sleeping pills to his two daughters also attempted suicide in chennai
சென்னையில் இரண்டு மகள்களுக்கும் தூக்கம் மாத்திரை கொடுத்து தந்தையும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி ரால்முகமது தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இரண்டு மகள்களும் திருவல்லிக்கேணியில் உள்ள விஜயகுமார் வீட்டில் தங்குவார்கள். இதையடுத்து வீட்டில் இரண்டு மகள்களும் இருந்த நிலையில், விஜயகுமார் பாலில் தூக்கம் மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
பின்பு அவரும் அந்தப் பாலையை குடித்துள்ளார். இதனால் விஜயகுமார் மற்றும் இரண்டு மகள்களும் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்து உள்ளனர். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A father who gave sleeping pills to his two daughters also attempted suicide in chennai