தாறுமாறாக ஓடிய லாரி., மூளை சிதறி விவசாயி பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சார்ந்த முருகேசன் (45)., விவசாயியாக பணியாற்றி வரும் இவருக்கு அங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 

முருகேசன் பணி நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு., பணிகள் நிறைவு பெற்று பின்னர் திண்டுக்கல்லில் இருந்து போடிக்கு டானது இருசக்கர வாகனத்தில் திரும்பினார். 

அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கனரக வாகனம் முருகேசனின் வாகனம் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது., இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கனரக வாகனத்தின் ஓட்டுனரை கைது செய்தனர். மேலும் இந்த பகுதியில் அதிகளவிலான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவது அதிவேகத்தில் செல்வதே காரணம் என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A ACCIDENT IN THENI FORMER DIED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->