39 தொகுதியிலும் இவர்கள் போட்டியிட விரும்புகின்றனர் - கே.பி.ராமலிங்கம் பரபரப்பு பேட்டி!
39 constituencies contest bjp KP Ramalingam
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதியிலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பா.ஜ.க தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்திருப்பதாவது,
திமுக ஆட்சி தமிழகத்தில் மிகவும் மோசமாக உள்ளது. இவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவார்கள் என தெரியவில்லை. ஆளும் கட்சியினரின் அராஜகத்தை ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் வரும் தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை காண முடியும். பா.ஜ.க தொண்டர்கள் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றனர்.
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறும். மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவார் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
English Summary
39 constituencies contest bjp KP Ramalingam