தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!
தேனி, பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பொன்ராம் என்பவரின் மகள் கீதாலட்சுமி (வயது 33). இவர் பிளஸ் டூ படிப்புடன், ஆசிரியர் பயிற்சிப் பட்டயத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் முதல், ஜுலை 31-ஆம் தேதி வரை, தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்கி தற்காலிக ஊழியராகப் பணி புரிந்து வந்தார்.
இவரது அலுவலகத்திற்கு அருகில், தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது. இங்கு நவீன்குமார் (வயது 26) என்பவர், காவலாளியாகப் பணி புரிந்து வந்துள்ளார்.
இரண்டு அலுவலகங்களும், அருகருகே இருந்ததால், கீதாலட்சுமிக்கும், நவீன்குமாருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நவீன்குமாரை விட, கீதாலட்சுமிக்கு 7 வயது அதிகம் என்றாலும், இந்த காதல் வயது வித்தியாசம் பாராமல் தொடர்ந்திருக்கிறது.
அவ்வப்போது, கீதாலட்சுமியிடம், பணம் நகை எல்லாம் வாங்கி உள்ளார் நவீன். 26-2-2017 அன்று, தேனி மாவட்ட அலுவலகத்தில் வைத்து, கீதாலட்சுமியை பலாத்காரம் செய்துள்ளார் நவீன்.
தொடர்ந்து, அவரை பைக்கில் அழைத்துச் சென்று, உசிலம்பட்டி அருகே உள்ள மானுாத்து கருப்பணசாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்தது போல, போட்டோ ஒன்றும் எடுத்துள்ளார்.
ஆனால், அதற்குப் பிறகு, கீதாலட்சுமியுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதனால், கோபம் அடைந்த கீதாலட்சுமி, இது குறித்து, தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
33 old women sexually abused