திருமணமான இரண்டே நாளில் சிறுமி மரணம் - பின்னணியில் நடந்த துயரம்..? வெகுண்டு எழுந்த தாய்மாமன்..!
தேனி மாவட்டத்தில் பழங்குடியின சிறுமிக்கு திருமணம் செய்துவைத்து இரண்டு நாட்களில் இறந்ததை தொடர்ந்து தந்தை மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
தேனி மாவட்டத்தில் பழங்குடியின சிறுமிக்கு திருமணம் செய்துவைத்து இரண்டு நாட்களில் இறந்ததை தொடர்ந்து தந்தை மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறுமியின் தாய்மாமன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே சிறைக்காடு பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முருகன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில்,
எனது தங்கை கடந்த 2017 ஆண்டு காலமானதை தொடர்ந்து, அவரது 5 பிள்ளைகள் போடி கள்ளர் பள்ளியில் பயின்று வந்த நிலையில் என் தங்கையின் மூத்த மகள் சுமார் 14 வயது சித்ராவை வேறு சமூகத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு என் தங்கையின் கணவர் திருமணம் செய்து வைத்ததாகவும், இரண்டாம் நாளிலேயே சிறுமி இறந்துவிட்டதாகவும், எங்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்துவிட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி 18 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்தாலே அது கடும் தண்டனைக்குரிய குற்றம் எனப்படும் நிலையில், திருமணமான சிறுமி இரண்டே நாளில் இறந்துள்ளதால் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறுகின்றனர் சிறுமியின் தாய்மாமன் வழி உறவினர்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது அப்பகுதி மக்களிடத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
14 years old child dead near theni