அநியாயத்திற்கு பட்ட அசிங்கம்...? ஆக்ரோஷமான ரோஹித் சர்மா.. 'ஒழுங்கு மரியாதையா வேலைய பாத்துட்டு போங்க...' ஷாக்கிங் ட்விட்..!!
யோ-யோ டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தேர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், தன் மீது விமர்சனங்களை வைத்தவர்களுக்கு பதிலடி அளித்துள்ளார்.
யோ-யோ டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தேர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், தன் மீது விமர்சனங்களை வைத்தவர்களுக்கு பதிலடி அளித்துள்ளார்.
ஒரு அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில், வீரர்களை தெரிவு செய்வதற்கு யோ-யோ டெஸ்ட் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நச்சத்திர பேட்ஸ்மேன் வீரர் ரோஹித் ஷர்மா யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்துள்ளார்.
ஆனால், அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக எந்த வீரரும் யோ-யோ டெஸ்ட்டில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, ரோஹித் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கோபத்துடன் தன் மீது விமர்சனங்களை முன் வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘நான் எங்கு எப்படி என் நேரத்தை செலவழிக்கிறேன் என்பது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவரவர்கள் தங்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. வழிமுறைகளை பின் பற்றும் வரையில், நான் என் நேரத்தை எப்படி வேண்டுமானலும் செலவழிக்க உரிமை படைத்தவன்.
யோ-யோ டெஸ்ட்டில் ஒரே வாய்ப்புதான் பெற்றேன். அதில் தேறிவிட்டேன். ஒரு தகவலை கூறும் முன் சரிபார்ப்பது எப்போதுமே நல்லது அல்லவா’ என தெரிவித்துள்ளார்.