#IPL2022 || அடுத்தடுத்து விக்கெட்., களத்தில் இறங்கிய தோனி., கைகோர்த்த ஜடேஜா.! சற்றுமுன் ஆட்டத்தின் நிலவரம்,! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி தொடங்கியுள்ளது. 

மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றது. 

முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - சென்னை அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருத்ராஜ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கான்வே மூன்று ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க. மறுமுனையில் ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 28 ரன்கள் சேர்த்த போது ஸ்டம்பிங் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அம்பத்தி ராயுடு 15 ரன்களுக்கும், சிவம் துபே 3 ரன்னுக்கும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா உடன், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது களமிறங்கி ஆடிவருகிறார்.

தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12.3 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 65 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSKvKKR RavindraJadeja Dhoni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->