துாங்கி எழுந்ததும், நம் உடலின் எந்த பாகம், முதலில் பூமியைத் தொட வேண்டும் தெரியுமா?
துாங்கி எழுந்ததும், நம் உடலின் எந்த பாகம், முதலில் பூமியைத் தொட வேண்டும் தெரியுமா?
பெரும்பாலும், கட்டிலில் துாங்குபவர்கள், துாங்கி காலையில் எழுந்ததும், தரையில் தான் கால் வைப்பார்கள். அதாவது, எழுந்ததும், பூமியில் படுவது நம் கால்கள் தான்.
ஆனால், துாங்கி எழுந்தவுடன், முதலில் கைகளால் தான் பூமியைத் தொட வேண்டும். பாயில் படுத்திருக்கும் பல பெரியவர்கள், துாங்கி எழுந்ததும், கையைத் தரையில் தொட்டு தலையில் வைத்துக் கொள்வார்கள். இதில் ஆசாரம், சாஸ்திரம் இருப்பது போல், அறிவியல் பூர்வமான பலனும் உள்ளது.
நாம் துாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் உடலில் சமநிலை விசை இருக்கும். இதை, “ஸ்டாடிக் எனர்ஜி” என்று சொல்வார்கள். துாங்கி எழுந்தவுடன், இந்த விசை, டைனமிக் விசையாக மாறும். இது ஆற்றல் வாய்ந்த விசை.
துாங்கி எழுந்தவுடன், நம் கால் தரையில் பட்டால், அந்த ஆற்றல், கால் வழியே, தரையில் வெளியேறி விடும். இதனால், நமது பலம் குறையும். அதே சமயம், கையைக் கொண்டு தரையைத் தொடும் போது, அந்த ஆற்றல் நமது கைகளின் வழியாக மேல் நோக்கிப் பரவும். நமது பலமும் பெருகும்.
English Summary
what we have to do first, after wake up?