இன்று இந்த அம்மன் உங்களுடன் பேசுவாள்…! தீர்க்க முடியாத குறையையும் தீர்த்து வைப்பாள்….!
இன்று இந்த அம்மன் உங்களுடன் பேசுவாள்…! தீர்க்க முடியாத குறையையும் தீர்த்து வைப்பாள்….!
மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவர்களிடமும், இரண்டு வகையான எண்ணங்கள் தான் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
ஒன்று, “வாழ்க்கை இப்படியே போய் விடுமோ?” என்பது. மற்றொன்று, “வாழ்க்கை இப்படியே பிரச்சினை இல்லாமல் போகனுமே”. இந்த இரண்டு வகையான எண்ணங்கள் கொண்ட மக்கள் அனைவரும் வணங்க வேண்டியது, மடப்புரம் காளி அம்மனைத் தான்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள வைகை ஆற்றின் கரையோரத்தில், உள்ள மடப்புரத்தில் தான், உலகை ஆளும், இந்த பராசக்தி வீற்றிருக்கிறாள்.
இந்த அன்னைக்கு, வானைமே கூரை! பிரம்மாண்ட குதிரையின் நிழலில் வீற்றிருக்கிறாள். தீராத பிரச்சினை எதுவென்றாலும், இந்த அன்னையின் முன்பாக நின்று கொண்டு, அந்த தெய்வத்தின் முகத்தைப் பார்த்து, கை கூப்பி, மனம் உருக வேண்டுங்கள். அந்த தெய்வம், மானசீகமாக உங்களுடன் பேசும்.
யாராவது உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், அன்னைக்கு அருகில் உள்ள சத்தியக்கல்லில் சத்தியம் செய்தால், துரோகம் நினைப்பவர்களை, 30 நாளில், தன் காலில் விழச் செய்யும் சக்தி பெற்றவள் இந்த தாய்!
எலுமிச்ச மாலை தான், இந்த அன்னையின் விருப்பம். கோயிலுக்குச் செல்பவர்கள், தவறாமல், ஒரு எலுமிச்சம் பழத்தையாவது கொண்டு செல்லுங்கள்.
இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள வைகை ஆற்றில் மூழ்கி குளித்தால், காசியில் மூழ்கிய புண்ணியத்தை விட அதிக பலன் கிடைக்கும். செய்து பாருங்கள்! பலனை உணர்வீர்கள்!
கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள், இந்த அன்னையை, மனதால் வேண்டிக் கொண்டாலே, மனம் இரங்கி அருள் புரிவாள்.
மதுரை ராஜா -
English Summary
Madapuram Kali Amman Temple