பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் நிறுவனம், என்னமா யோசிக்கிறாங்க.! கெட்டு போறதுனு முடிவாயிடுச்சு, கொஞ்சம் நல்லது செய்யலாமே..
ஒரு சிகரெட் கம்பெனியின் புதிய முயற்சி....
சிகரெட் புகையில் ஆயிரக்கணக்கான தீய பொருள்கள் இருக்கின்றன
அவை நிக்கோடீன், நைட்ரஐன், அம்மோனியா முதலியவை. இவற்றுள் முதன்மையானது நிக்கோடீன், இதனால் உடலுக்கு எக்கசக்க பிரச்சனைகள் ஏற்படுகிறது
இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை சீர்குலைக்கிறது...ரத்த அழுத்தத்தை கூட்டுகிறது.
கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் இழந்து கால்கள் அழுகி இறப்பு ஏற்படும்.
வயிற்றுப்புண் வாய், துர்நாற்றம், பற்களில் கரைபடிதல், புற்றுநோய், இருமல், ஞாபகமறதி போன்ற நோய்கள் உண்டாகிறது.
இந்த புகையை சுவாசிக்கும் மற்றவரும் இதேபோல் பாதிப்பு அடைகின்றனர்...கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருந்தால் தாய் மற்றும் சேய் இருவரும் பாதிப்பு அடைகின்றனர்..
இத்துனை தீமைகள் இருந்தாலும் யாரும் புகைபிடிப்பதை நிறுத்துவதில்லை..எதிர்காலத்தில் இத்துனையும் ஏற்படும் என்பதை நன்றாக அறிந்த பலரும் இதை தெரிந்தே செய்கின்றனர்..
புகைபிடிப்பவர்களால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை, சுற்றுபுறசூழலும் பாதிப்படைகிறது
காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது..இந்த சுற்றுபுறசூழலை சமன் செய்ய
ஒரு சிகரெட் கம்பெனி, சிகரெட் ஃபில்டரில் செடியின் விதைகளை வைத்துவிடுகிறார்கள்...
புகைபிடித்தல் உடலுக்கு கேடுன்னு சொன்னா கேட்கவா போகிறார்கள்.
அதனால் தான் இந்த முயற்சி என்கிறது அந்த கம்பெனி, அதாவது பாவத்தையும் செய்துவிட்டு, அதற்கான பிராயிசித்தையும் செய்கிறார்கள்
English Summary
cigarette company's new idea