சிறுவயது இளைஞருடன் கள்ளக்காதல்! இடையூறாக இருந்த கணவனை போட்டுவிட்டு, மனைவி நடத்திய பலே நாடகம்! அம்பலமான ரகசியத்தால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் வசித்து வந்தவர் குருசாமி. 48 வயது நிறைந்த இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவரது மனைவி ஜெயந்தி. 45 வயது நிறைந்த இவரும் மற்றொரு செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் குருசாமி செங்கல் சூளையில் ரத்தம் வழிய பிணமாக கிடந்துள்ளார்.இதனை கண்ட குருசாமியின் உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குருசாமியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனையில் குருசாமியை கடுமையாக  தாக்கி, அரிவாளால் தலையில் பயங்கரமாக அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் குருசாமியின் மனைவி ஜெயந்தியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைத்த போலீசார்  அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .                                                                                                                       

அப்போது தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்தான் மனைவியே கணவன் குருசாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

ஜெயந்திக்கும் அவர் வேலை செய்யும், சூளையை நடத்தி வந்த செல்வின் ஆபிரகாம் என்ற 28 வயது இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இதுகுறித்து கணவர்  குருசாமிக்கு தெரிய வந்தநிலையில், அவர் மனைவியையும், அந்த இளைஞரையும் கண்டித்துள்ளார்.

அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி  ,குருசாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் குருசாமி  தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் படுத்திருந்தபோது , அங்கு சென்ற செல்வின் ஆபிரகாம் அரிவாளால் அவரது தலையில் கடுமையாக அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

பின்னர் இதையறிந்த ஜெயந்தி தனது கணவர் தவறி விழுந்து இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து  செல்வினையும், ஜெயந்தியையும் பொலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife killed her husband for her ilegal relationship


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->