தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளிடம் தந்தை செய்த வேலை!
தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளிடம் தந்தை செய்த வேலை!
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 45 வயதான இவர் தினக்கூலியாக ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு 14 வயது பள்ளி செல்லும் மகள் ஒருவர் இருக்கிறார். அவருடைய மகள் கடந்த 2016 ஆம் ஆண்டு பருவம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது மனைவி இல்லாத நேரங்களில் தினேஷ் தனது மகள் என்று பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி தன்னுடைய அம்மாவிடம் நடந்த கொடுமையை கூறாமல் இருந்துள்ளார்.
இவ்வாறு இரண்டு ஆண்டுகள் சென்ற நிலையில், மாணவி சிரமப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன அந்த மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில்,அவருடைய மனைவி, கணவரிடம் தான் வேலைக்கு செல்வதாக கூறி மறைந்திருந்து கண்காணித்துள்ளார். அன்று மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனது கணவரிடம் இருந்து மகளை காப்பாற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் 376 , 506, 511 ஆகிய பிரிவுகளின் கீழ் அவரின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது போக்ஸோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Father's job at the time of her mother's absence!