பேராசிரியைக்கு உப்புமாவில் விஷம் கலந்தது கொடுத்த கணவன்!! அடுத்தடுத்து வெளியான பகீர் வாக்குமூலம்!!
A teacher murdered by his husband
குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வேலூர் பகுதியில் வசித்து வருபவர் ஜான் அலெக்சாண்டரது மகள் திவ்யா சில்வஸ்டர் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
1½ ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவிற்கும்,பெல்லாமினிற்கும் திருமணம் நடைபெற்றது. அவரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாகனத்தை நிறுத்தி அருகில் இருந்தோரின் உதவியுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உண்ட உணவில் விஷமிருந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் திவ்யா வீட்டில் வளர்க்கும் நாய் உப்புமாவை சாப்பிட்டுவிட்டு இறந்து கிடந்துள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது கணவர் அந்த உப்புமாவில் விஷம் கலந்தது தெரியவந்துள்ளது.
இதனால், அவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த கள்ளகாதலால் தான் தனது மனைவியை கொலை செய்ய அவர் நினைத்துள்ளார்என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A teacher murdered by his husband